நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
மலையாளத்தில் நடிகர் நிவின்பாலி தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்தவர், யார் கண் பட்டதோ தெரியவில்லை கடந்த சில வருடங்களாகவே ஒரு ஹிட் படம் கொடுப்பதற்காக ரொம்பவே தடுமாறி வருகிறார். இந்த நிலையில் ராம் இயக்கத்தில் தமிழில் இவர் நடித்துள்ள ஏழு கடல் ஏழுமலை என்கிற படம் குறித்த எதிர்பார்ப்பு தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் அதிகமாகவே இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ராமச்சந்திரா பாஸ் அன் கோ என்கிற படத்தில் நடித்து வருகிறார் நிவின்பாலி. இது அவரது 42 வது படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தின் டைட்டில் வித்தியாசமாக இருந்தாலும் கூட இதற்கு அடுத்ததாக நிவின்பாலியின் 44வது படத்தை இயக்க உள்ள இயக்குனரின் பெயர் தான் ரசிகர்களை அதைவிட ஆச்சரியப்படுத்தி உள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத அந்த படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குனரான 'ஆர்யன் ரமணி கிரிஜா வல்லபன்' என்பவர்தான். கிட்டத்தட்ட கமல் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் பட பாணியில் இருக்கிறது இவரது பெயர். இதற்கு முன்னதாக 'பர்ன் தி பேபி' என்கிற குறும்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.