துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகிய இருவர் மீதும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு சரியான முறையில் ஒத்துழைப்பு அளிக்காதது, கால்ஷீட் குளறுபடி உள்ளிட்ட பல புகார்கள் அளிக்கப்பட்டு வந்தன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர்கள் படங்களில் நடிக்க மலையாள தயாரிப்பாளர் சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ஸ்ரீநாத் பாஷி மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வின் உறுப்பினராக இல்லை என்பதால் பிரச்சினை கிளம்பிய அந்த சமயத்தில் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேருவதற்கு விண்ணப்பித்தார்.
அதேசமயம் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூடும்போது தான் இதன் மீது தீர்மானம் எடுக்கப்படும் என்பதால் அவரது விண்ணப்பம் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கூடிய நடிகர் சங்க பொதுக்குழுவில் இவரது விண்ணப்பம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இவர் தயாரிப்பாளர் தரப்பில் உள்ள தன்னுடைய பிரச்னைகளை எல்லாம் சுமூகமாக முடித்துவிட்டு வந்த பின்னர்தான் இவருக்கு நடிகர் சங்கத்தின் உறுப்பினராக சேரும் வாய்ப்பு அளிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உறுப்பினர் படிவம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் நடிகை நிகிலா விமல் உள்ளிட்ட ஏழு பேருக்கு நடிகர் சங்க உறுப்பினராக க்ரீன் சிக்னல் அளித்துள்ளது நடிகர் சங்கம். இதை தொடர்ந்து நடிகர் ஸ்ரீநாத் பாஷி இனி தானாகவே பிரச்சனைக்குரிய தனது படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் சென்று தங்களுக்குள்ளேயே சர்ச்சையை தீர்த்துக் கொண்டால் மட்டுமே அவரது திரையுலக பயணம் சீராக தொடரும் என்று தெரிகிறது.