2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராஜமவுலி, மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ராஜமவுலி படங்களின் வெற்றிக்கு பக்கபலமாக பணியாற்றி வரும் அவரது தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் இதற்கான கதை உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மகேஷ் பாபு படம் பற்றி அவர் கூறும்போது, நிஜத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை மையப்படுத்தி அட்வென்சர் பாணியிலான திரைப்படமாக உருவாக இருக்கிறது என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்தப்படம் ஒரு பாகத்துடன் முடியாமல் இதற்கு அடுத்தடுத்த பாகங்களும் இருக்கும் விதமாக இதன் மைய கதாபாத்திரத்தை உருவாக்கி வருகிறாராம் விஜயந்திர பிரசாத். அதேசமயம் இதன் அடுத்த பாகங்களில் இதே கதை தொடரும் என்று சொல்ல முடியாது.. கதை வேறாக இருக்கும்.. ஆனால் இதில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த பாகங்களில் தொடர்வார்கள் என்றும் ஒரு புதிய தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் விஜயேந்திர பிரசாத்.