துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மலையாள திரையுலகில் நல்ல நடிப்பு திறமை கொண்ட, வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாஷி. இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் படப்பிடிப்பின்போது பல்வேறு விதமான தொந்தரவுகளை தருவதாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு பல புகார்கள் வந்தன. நடிகர் ஷேன் நிகம் மீது, குறித்த நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார், கதையில் மாற்றங்களை சொல்கிறார், முழு படத்தையும் போட்டு காட்ட சொல்கிறார் மற்றும் ஒரு படத்திற்கு கொடுத்த செய்திகளை இன்னொரு படத்திற்கும் கொடுத்து கால்ஷீட் குளறுபடி செய்கிறார் என குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
அதேபோல நடிகர் ஸ்ரீநாத் பாஷி மீது, போன் அழைப்புகளை அலட்சியப்படுத்துகிறார் படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார் மற்றும் சில இடங்களில் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கிறார் என்பது போன்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து இந்த இருவர் மீதும் தயாரிப்பாளர் சங்கமும் இயக்குனர் சங்கமும் இணைந்து படங்களில் நடிக்க தடை விதித்தனர்.
இதில் ஸ்ரீநாத் பாஷி நடிகர் சங்க உறுப்பினராக இல்லை. அதே சமயம் இந்த பிரச்சனை நடந்த சமயத்தில் அவர் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் உறுப்பினராக சேருவதற்கு விண்ணப்பித்தார். ஆனால் இப்போது வரை அவரது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று மலையாள திரையுலக நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வின்போது இந்த இரு நடிகர்களின் பிரச்சனையும் பேசி சுமுகமாக தீர்க்கப்பட உள்ளது என்றும் இனி அவர்களால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சொல்லப்படுகிறது.