இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த மாதம் மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. 2018ல் கேரளாவையே புரட்டிப்போட்ட பெரும் மழை வெள்ளத்தையும் அதன் பாதிப்பையும் அதில் நடைபெற்ற மீட்பு பணிகளையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், வினீத் சீனிவாசன், நரேன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் கிட்டத்தட்ட 175 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் பேசுகையில், “இந்த படத்தில் பணியாற்ற அழைத்தபோது இதன் கதையை கேட்டுவிட்டும், இதன் லொக்கேஷனை பார்த்துவிட்டும் கிட்டத்தட்ட 20 ஒளிப்பதிவாளர்கள் இதிலிருந்து பின்வாங்கி சென்று விட்டனர். இறுதியாக வந்தவர் தான் ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜ். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு இன்று இந்த வெற்றிக்கு மிகப்பெரிய தூணாக மாறியுள்ளார். படத்தில் எது நிஜமாக எடுக்கப்பட்ட காட்சி, எது விஎப்எக்ஸ் என்று தெரியவில்லை என பலர் பாராட்டுவது விஎப்எக்ஸ் குழுவினருக்கு மட்டுமான பாராட்டு அல்ல, ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜுக்கும் அந்தப் பாராட்டில் பெரும்பங்கு உண்டு” என்று கூறியுள்ளார்.