பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் நன்கு அறிமுகமானவர் நடிகர் ராணா டகுபதி. தற்போது படங்கள் மட்டுமல்லாது வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது தம்பி அபிராம் முதன்முதலாக அஹிம்சா என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் வரும் ஜூன் இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது. அதேபோல தெலுங்கு திரையுலகின் இன்னொரு இளம் நடிகரான பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் என்பவரின் தம்பி பெல்லம்கொண்டா கணேஷ் நடித்துள்ள நேனு ஸ்டுடென்ட் சார் என்கிற படமும் வெளியாக இருக்கிறது.
இரண்டு நடிகர்களின் சகோதரர்கள் மோதிக்கொள்ளும் போட்டியாக மட்டும் இது இருந்திருந்தால் இதுபற்றி யாரும் கவலைப்பட போவதில்லை. ஆனால் மூன்றாவதாக பரேசன் என்கிற ஒரு படமும் இதே தேதியில் வெளியாகிறது. இந்த படத்தை இயக்குனர் ரூபக் ரெனால்ட்சன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தப்படத்தை நடிகர் ராணா தான் தனது நிறுவனம் சார்பாக வெளியிடுகிறார்.
தனது தம்பி நடித்துள்ள அறிமுகப்படம் வெளியாகும் அதேநாளில் இப்படி வேறொரு படத்தை தன் சொந்த நிறுவனம் மூலமாக ராணா ரிலீஸ் செய்வது தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு வாரம் கழித்தாவது ராணா அந்த படத்தை ரிலீஸ் செய்யலாமே, எதற்காக போட்டிக்கு ரிலீஸ் செய்வது போல செய்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.