அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

தெலுங்கு நடிகர் ரவிதேஜா தற்போது நடித்து வரும் படம் டைகர் நாகேஸ்வரர ராவ். இந்த படம் ஆந்திராவை சேர்ந்த ஸ்டூவர்ட்புரம் பகுதியில் 70களின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு கிரிமினலை பற்றிய படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் பான் இந்தியா படமாக மற்ற தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து படத்தின் டீசருக்காக தமிழில் நடிகர் கார்த்தி, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் சிவராஜ்குமார் மற்றும் ஹிந்தியில் ஜான் ஆபிரகாம் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். இதில் இதே போன்று 70களின் பின்னணியில் வாழ்ந்த ஒரு கிரிமினல் கதையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான குறூப் என்கிற படத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.