டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் |

மலையாள திரை உலகை சேர்ந்த பிரபல குணச்சித்திர நடிகர் சீனிவாசன். இவரது இரண்டு மகன்களில் ஒருவர் இயக்குனரும் நடிகருமான வினீத் சீனிவாசன். இவரது தம்பி தயன் சீனிவாசனும் நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியான லவ் ஆக்சன் ட்ராமா படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் முழு வீச்சில் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் நடித்து வரும் ஒசானா என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை என்கிற ஊரில் நடைபெற்று வருகிறது. இங்கே உள்ள மார்க்கெட் ஒன்றில் இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டபோது அங்குள்ள வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக கூறி தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒரு பகுதியினர் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினார்கள்.
மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றால் மார்க்கெட்டில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு இழப்பீடாக மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என பிடிவாதம் காட்டினர். வேறு வழியின்றி பணத்தை கொடுத்த பின்னரே படக்குழுவினர் அங்கே படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடிந்தது. அங்கே படப்பிடிப்பு நடத்துவதற்காக ஏற்கனவே நகராட்சியில் பணம் செலுத்தி உரிய அனுமதியை படக்குழுவினர் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.