துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, குறிப்பாக அந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு அதில் நடித்த ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருமே உலக அளவில் தெரிந்த நடிகர்கள் ஆகிவிட்டார்கள். தெலுங்கு திரையுலகிலும் முன்னை விட இருவருக்கும் மாஸ் கூடியுள்ளது. இந்த நிலையில் நாளை (மே-20) ஜூனியர் என்டிஆர் தனது 41வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து இவரது பிறந்தநாளை மிகவும் விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்
அந்த வகையில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் முதன்முறையாக ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சிம்மாத்ரி படத்தை ரீ ரிலீஸ் செய்து திரையிட உள்ளனர். இதற்கு முந்தைய வருடங்கள் வரை ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளில் அவரது ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வந்தாலும் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளிலேயே ரசிகர்களின் திருப்திக்காக ரிலீஸ் செய்யப்பட்டது.
ஆனால் இந்த முறை சிம்மாத்ரி திரைப்படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 1000 திரைகளில் திரையிட இருக்கிறார்களாம். 20 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படம் இப்படி ஆயிரம் திரைகளில் ரீ ரிலீஸ் செய்து திரையிடப்படுவது இதுதான் முதல் முறை என்கிறார்கள். வெறுமனே ஜூனியர் என்டிஆர் படமாக மட்டுமல்லாமல் ராஜமவுலி டைரக்சனில் இந்த படம் உருவாகி இருப்பதால் தான் இத்தனை காட்சிகள் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்களாம்.