கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்கும் மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
வளர்ந்து வரும் தெலுங்கு நடிகை ஷாலு சவுதாசியா. ஓ பில்லா நீ வல்லா, பாக்ய நகர வீட்டில் கம்மத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐதராபத்தில் உள்ள கே.பி.ஆர் பூங்காவில் ஷாலு நடை பயிற்சி சென்றபோது சில மர்மநபர்கள் அவரை தாக்கி பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். இதில் ஷாலு கூச்சலிட்டதால் அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்து கொண்டு ஓடிவிட்டனர். இந்த சம்பத்திற்கு பிறகு ஷாலு அந்த பூங்காவில் நடைபயிற்சி செய்யவில்லை.
கடந்த சில வாரங்களாக அவர் மீண்டும் நடைபயிற்சியை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் பூங்காவில் நடந்து செல்லும்போது ஒரு வாலிபர் பின்னாலேயே வந்து தன்னை துன்புறுத்துவதாக பூங்கா ஊழியர்களிடம் புகார் செய்தார். ஊழியர்கள் அந்த இளைஞரை பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஷாலு சவுராசியாவும் போலீசில் புகார் அளித்தார். வாலிபரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் நடிகையை பின் தொடரவில்லை என்றும், தானும் நடைபயிற்சி செய்ததாக தெரிவித்தார்.
போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அந்த வாலிபர் சொல்வது உண்மை என்று உறுதிப்படுத்தினர். “2021ம் ஆண்டு நடந்த சம்பவத்தின் பாதிப்பில் இருந்து ஷாலு இன்னும் வெளிவரவில்லை. யாரோ தன்னை பின்தொடர்வதாக அவர் உணர்கிறார். இதனால் அவருக்கு மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்க இருக்கிறோம்” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.