புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான நந்தமூரி தாரக ரத்னா, கடந்த ஜனவரி 27ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இவருக்கு வயது 39. அவருக்கு அலெக்யா ரெட்டி என்கிற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
தெலுங்கு திரையுலகின் மறைந்த மூத்த நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் பேரன்களில் ஒருவரான இவர், நந்தமூரி தாரக் குடும்பத்திலிருந்து தனது சித்தப்பா பாலகிருஷ்ணா, சகோதரர்கள் ஜூனியர் என்டிஆர், கல்யாண்ராம் ஆகியோரை தொடர்ந்து நடிகராக சினிமாவில் நுழைந்தார்.
2002ல் ஒகடோ நம்பர் குர்ரடு என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கூட தொடர்ந்து நடித்து வந்தார். தாத்தாவின் வழியில் எதிர்காலத்தில் அரசியலில் நுழையும் ஆசையில் தனது தாத்தா துவங்கிய தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து கட்சிப்பணிகளிலும் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார் நந்தமூரி தாரக ரத்னா.
குறிப்பாக அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் ஆசையுடன் இவர் களப்பணி ஆற்றி வந்தார். அந்தவகையில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி ஆந்திராவில் உள்ள குப்பம் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் யுவகளம் பாதயாத்திரையில் கலந்து கொண்டபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உடனடியாக குப்பம் தொகுதியில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சை அளிப்பதற்காக மறுநாளே பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தான், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மறைவிற்கு தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.