பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகையில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 483பேர் மரணம் அடைந்தார்கள். பலர் காணாமல் போனார்கள். 'ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளமாக இது அமைந்தது. 'கடுமையான இயற்கை பேரழிவு' என்று இந்திய அரசு இதை அறிவித்தது.
இந்த மாபெரும் இயற்கை பேரழிவு தற்போது சினிமா ஆகியுள்ளது. ஓம் சாந்தி ஓசானா, ஒரு முத்தச்சி கதா, சாராஸ் படங்களை இயக்கிய ஜூட் ஆன்டனி இயக்கி உள்ளார். அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், நோபின் பவுல் இசை அமைத்துள்ளார். குஞ்சாகோ போபன், டோவினோ தாமஸ், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கலையரசன், நரேன், லால், இந்திரன்ஸ், அஜு வர்கீஸ், தன்வி ராம், ஷிவதா, கௌதமி நாயர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் மலையாள சினிமாவின் முக்கியமான படம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஜூட் ஆன்டனி கூறியிருப்பதாவது: 4 ஆண்டுகளுக்கு முன்பு, 2018 அக்டோபர் 16, இந்த திரைப்படத்தை அறிவித்தேன். ஜாதி, மதம், கட்சி வேறுபாடுகள் இல்லாமல் மலையாளிகள் எப்படி ஒன்றிணைந்து வெள்ளத்தை எதிர்கொண்டார்கள் என்பது பற்றிய படம். கதையைக் கேட்டவர்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படவில்லை. சில படக்குழுவினர் படத்தின் படப்பிடிப்பு சாத்தியமில்லை என்று கூறினர். என்னுடைய சக எழுத்தாளர் அகில் பி தர்மஜன் மட்டுமே என் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். நாட்கள் கடந்தன. கொரோனா பெருந்தொற்றால் படத்தை அனைவரும் மறந்துவிட்டனர். ஆனால் என்னால் தூங்க முடியவில்லை. இந்த கனவு திட்டத்தை கைவிட நான் மறுத்துவிட்டேன். இப்போது அதை சாதித்து காட்டியிருக்கிறேன். என்கிறார்.