கிரிக்கெட் வீரராக களமிறங்கும் ஆதி | 'ஆர்ஆர்ஆர்' டிரைலரை முந்திய 'ஹிட் 3' | பிளாஷ்பேக்: காட்சியை தத்ரூபமாக்க, கழுதைகளை கொண்டுவரச் செய்து, படப்பிடிப்பு நடத்திய 'மாடர்ன் தியேட்டர்ஸ்' அதிபர் டி ஆர் சுந்தரம் | இளையராஜா நோட்டீஸ்: இன்று பதில் கிடைக்குமா ? | அஜித்தின் அடுத்த படமும் தெலுங்கு நிறுவனத்திற்கே..?? | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்? | இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ள நடிகர் திலீப், கடந்த சில வருடங்களாக நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக பல சோதனைகளை சந்தித்து வந்தாலும் திரையுலகை பொறுத்தவரை அவரது மார்க்கெட் ஸ்டெடியாகவே உள்ளது. வழக்கு விசாரணைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் திலீப். இந்த நிலையில் அவர் ஏற்கனவே தனக்கு ராம்லீலா என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அருண் கோபியுடன் மீண்டும் இணைந்து தனது 147வது படத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் நடிகை தமன்னா முதன்முதலில் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சரத்குமார், ஈஸ்வரி ராவ், விடிவி கணேஷ் உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது திலீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்திற்குப் 'பாந்த்ரா' என டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படம் மும்பை பின்னணியில் நடைபெறும் கேங்ஸ்டர் பாணியிலான படமாக தயாராகிறது என்றும் சொல்லப்படுகிறது.