ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கன்னட திரையுலகில் குணசித்ர நடிகராக இருப்பர் சிவரஞ்சன். அமிர்தா சிந்து, வீர பத்ரா போன்ற கன்னடப் படங்களில் சிவரஞ்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெலகாவியில் உள்ள பைல்ஹோங்கல் நகரில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு பழைய ஹனமந்தா தேவா கோயிலுக்கு அருகில் உள்ள அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்று பேர் கும்பல், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. ஆனால், அவர் சுதாரித்துக் கொண்டதால் அவர் மீது துப்பாக்கி குண்டுகள் பாயவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த கும்பலை விரட்டவே, அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். 3 ரவுண்ட் துப்பாக்கி சூடு நடந்திருப்பதாகவும், சொத்து பிரச்சினை தொடர்பாக சிவரஞ்சனின் உறவினர்களே இதில் ஈடுபட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.