மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் கே.என்.சசிதரன். 72 வயதான சசிதரன் சினிமாவில் இருந்து விலகி கொச்சியில் உள்ள எடப்பள்ளியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சசிதரனுக்கு வீனா என்ற மனைவியும் ரித்து என்ற மகளும் முகில் என்ற மகனும் உள்ளனர்.
சசிதரன் புனே திரைப்பட கல்லூரியில் சினிமா கற்று, 1984ம் ஆண்டு அக்கரே என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் மம்முட்டி மோகன்லால் இணைந்து நடித்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு பல படங்களை இயக்கியவர் கடைசியாக 'நாயனா' என்ற படத்தை இயக்கி இருந்தார். 2014ம் ஆண்டு வெளியான இதில் மியா ஜார்ஜ், அனுபம் கெர் உட்பட பலர் நடித்திருந்தனர்.