ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
கொரோனா தொற்று காரணமாக திரைப்படத்துறை பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது சினிமாத்துறை முன்பைவிட அதிக வேகத்தில் வசூலை குவித்து வருகிறது. தெலுங்கு சினிமாவில் புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்கள் கோடிகளை குவித்தது. கொரோனா காலத்தில் சம்பள உயர்வு எதையும் தொழிலாளர்கள் பெறவில்லை.
சினிமா தொழிலாளர்களுக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 4 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது சினிமாவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாலும், விலைவாசி உயர்வு காரணமாகவும் தங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தரவேண்டும் என்று தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில், தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி, இன்று (ஜூன் 22) முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் தெலுங்கு படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, ஐதராபாத்தில் நடந்து வரும் தமிழ் படத்தின் படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது.