துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கடந்து 35 வருடங்களுக்கு மேலாக நடிப்பை மட்டுமே கவனித்து வந்த மோகன்லால், முதன்முறையாக இயக்குனராக மாறி இயக்கிவரும் ‛பாரோஸ்' என்கிற படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து ஏற்கனவே ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தான் நடித்து வந்த ராம் படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது தனது புதிய படம் பற்றிய அறிவிப்பை அறிவித்துள்ளார் மோகன்லால். இது அவரது 353வது படமாகும். பஹத் பாசில் நடித்த அதிரன் படத்தை இயக்கிய விவேக் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் முன்னாள் அமைச்சர் ஷிபு பேபி ஜான் என்பவர் தயாரிப்பாளராகவும் அடி எடுத்து வைத்துள்ளார்.
“எனது 35 வருட கால நண்பரை தயாரிப்பாளராக மாற்றி ஒரு புதிய பாதையில் அழைத்துச் செல்வதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார் மோகன்லால். ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் தான் நடித்துவரும் ராம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக கூறியுள்ளார் மோகன்லால்.