பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இவரது நடிப்பில் கடந்த வெள்ளியன்று ‛சார்லி 777' என்கிற படம் வெளியானது. பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் நாய்க்கும் மனிதனுக்குமான பாசப்பிணைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ளது. குறிப்பாக ஒரு நாயின் ஆசை என்னவாக இருக்கும் என்று அதை வளர்க்கும் மனிதன் உணர்ந்து பல சிரமங்களுக்கு இடையே அந்த ஆசையை நிறைவேற்றி வைக்க முயற்சி எடுக்கும் மனிதாபிமானம் பற்றி இந்த படம் பேசியிருந்தது.
இந்த படத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பார்த்தார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது அவரது கண்கள் கலங்கி இருந்தன. மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை என்னுடைய செல்ல பிராணியாக நான் வளர்த்த சன்னி என்கிற நாயை நினைவுபடுத்தியது. நாய்க்கும் மனிதனுக்குமான அன்பு எந்தவித எல்லையும் இல்லாதது. இந்த படத்தைப் பார்த்ததும் தெரு நாய்களை தத்தெடுத்து பராமரித்து பாதுகாக்கும் முயற்சியை எடுத்து இருக்கிறேன். அதேபோல நாய் பயிற்சியாளர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக சில திட்டங்களை அறிவிக்க முடிவு செய்துள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.