மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இவரது நடிப்பில் கடந்த வெள்ளியன்று ‛சார்லி 777' என்கிற படம் வெளியானது. பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் நாய்க்கும் மனிதனுக்குமான பாசப்பிணைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ளது. குறிப்பாக ஒரு நாயின் ஆசை என்னவாக இருக்கும் என்று அதை வளர்க்கும் மனிதன் உணர்ந்து பல சிரமங்களுக்கு இடையே அந்த ஆசையை நிறைவேற்றி வைக்க முயற்சி எடுக்கும் மனிதாபிமானம் பற்றி இந்த படம் பேசியிருந்தது.
இந்த படத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பார்த்தார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது அவரது கண்கள் கலங்கி இருந்தன. மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை என்னுடைய செல்ல பிராணியாக நான் வளர்த்த சன்னி என்கிற நாயை நினைவுபடுத்தியது. நாய்க்கும் மனிதனுக்குமான அன்பு எந்தவித எல்லையும் இல்லாதது. இந்த படத்தைப் பார்த்ததும் தெரு நாய்களை தத்தெடுத்து பராமரித்து பாதுகாக்கும் முயற்சியை எடுத்து இருக்கிறேன். அதேபோல நாய் பயிற்சியாளர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக சில திட்டங்களை அறிவிக்க முடிவு செய்துள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.