ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா |
தமிழில் ஜோக்கர் படம் மூலம் வித்தியாசமான வித்தியாசமான கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் குருசோமசுந்தரம். அதன்பிறகு ரஜினிகாந்த் நடித்த பேட்ட உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்த குருசோமசுந்தரம் மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான மின்னல் முரளி என்கிற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் நடித்த ஹீரோ டோவினோ தாமஸ் மற்றும் குருசோமசுந்தரம் என இரண்டு பேருமே சூப்பர்மேன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அந்த படத்தின் மூலம் மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற குருசோமசுந்தரத்திற்கு அதைத்தொடர்ந்து மலையாளத் திரையுலகில் நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன.
அந்தவகையில் தற்போது மலையாளத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்து வருவதாக கூறியுள்ளார் குருசோமசுந்தரம். இதற்காக சுமார் 70 புது இயக்குனர்களிடம் கதை கேட்டதாகவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் உருவாக்கி வைத்திருந்ததாகவும் அவற்றில் இருந்து பத்து படங்களை தேர்ந்தெடுப்பதே தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் கூறியுள்ளார் குருசோமசுந்தரம். அவர் சொல்வதை வைத்து பார்க்கும்போது இன்னும் கொஞ்ச நாளைக்கு அவரை தமிழ் திரையுலகம் பக்கம் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது..