‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழில் ஜோக்கர் படம் மூலம் வித்தியாசமான வித்தியாசமான கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் குருசோமசுந்தரம். அதன்பிறகு ரஜினிகாந்த் நடித்த பேட்ட உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்த குருசோமசுந்தரம் மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான மின்னல் முரளி என்கிற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் நடித்த ஹீரோ டோவினோ தாமஸ் மற்றும் குருசோமசுந்தரம் என இரண்டு பேருமே சூப்பர்மேன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அந்த படத்தின் மூலம் மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற குருசோமசுந்தரத்திற்கு அதைத்தொடர்ந்து மலையாளத் திரையுலகில் நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன.
அந்தவகையில் தற்போது மலையாளத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்து வருவதாக கூறியுள்ளார் குருசோமசுந்தரம். இதற்காக சுமார் 70 புது இயக்குனர்களிடம் கதை கேட்டதாகவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் உருவாக்கி வைத்திருந்ததாகவும் அவற்றில் இருந்து பத்து படங்களை தேர்ந்தெடுப்பதே தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் கூறியுள்ளார் குருசோமசுந்தரம். அவர் சொல்வதை வைத்து பார்க்கும்போது இன்னும் கொஞ்ச நாளைக்கு அவரை தமிழ் திரையுலகம் பக்கம் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது..




