இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் ஜோக்கர் படம் மூலம் வித்தியாசமான வித்தியாசமான கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் குருசோமசுந்தரம். அதன்பிறகு ரஜினிகாந்த் நடித்த பேட்ட உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்த குருசோமசுந்தரம் மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான மின்னல் முரளி என்கிற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் நடித்த ஹீரோ டோவினோ தாமஸ் மற்றும் குருசோமசுந்தரம் என இரண்டு பேருமே சூப்பர்மேன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அந்த படத்தின் மூலம் மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற குருசோமசுந்தரத்திற்கு அதைத்தொடர்ந்து மலையாளத் திரையுலகில் நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன.
அந்தவகையில் தற்போது மலையாளத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்து வருவதாக கூறியுள்ளார் குருசோமசுந்தரம். இதற்காக சுமார் 70 புது இயக்குனர்களிடம் கதை கேட்டதாகவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் உருவாக்கி வைத்திருந்ததாகவும் அவற்றில் இருந்து பத்து படங்களை தேர்ந்தெடுப்பதே தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் கூறியுள்ளார் குருசோமசுந்தரம். அவர் சொல்வதை வைத்து பார்க்கும்போது இன்னும் கொஞ்ச நாளைக்கு அவரை தமிழ் திரையுலகம் பக்கம் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது..