ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழில் ஜோக்கர் படம் மூலம் வித்தியாசமான வித்தியாசமான கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் குருசோமசுந்தரம். அதன்பிறகு ரஜினிகாந்த் நடித்த பேட்ட உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்த குருசோமசுந்தரம் மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான மின்னல் முரளி என்கிற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் நடித்த ஹீரோ டோவினோ தாமஸ் மற்றும் குருசோமசுந்தரம் என இரண்டு பேருமே சூப்பர்மேன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அந்த படத்தின் மூலம் மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற குருசோமசுந்தரத்திற்கு அதைத்தொடர்ந்து மலையாளத் திரையுலகில் நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன.
அந்தவகையில் தற்போது மலையாளத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்து வருவதாக கூறியுள்ளார் குருசோமசுந்தரம். இதற்காக சுமார் 70 புது இயக்குனர்களிடம் கதை கேட்டதாகவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் உருவாக்கி வைத்திருந்ததாகவும் அவற்றில் இருந்து பத்து படங்களை தேர்ந்தெடுப்பதே தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் கூறியுள்ளார் குருசோமசுந்தரம். அவர் சொல்வதை வைத்து பார்க்கும்போது இன்னும் கொஞ்ச நாளைக்கு அவரை தமிழ் திரையுலகம் பக்கம் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது..