பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானார். அந்த கொடூர நிகழ்வை அதில் ஈடுபட்ட நபர்கள் வீடியோவாகவும் படம் பிடித்தனர். இந்தநிலையில் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுடன் நடிகர் திலீப்புக்கும் முக்கிய பங்கு உண்டு என்பது விசாரணையில் தெரியவந்து அவரும் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மூன்று மாத சிறைத்தண்டனைக்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு சில வருடங்களாகவே மெதுவாக நகர்ந்து வந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையை மே 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே போலீசாருக்கு காலக்கெடு விதித்திருந்தது. ஆனால் திலீப் மொபைல்போனில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகள் சம்பந்தமாக இன்னும் சில சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டும் அதற்கு இன்னும் சற்று கால அவகாசம் வேண்டும் என போலீஸ் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம் 45 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி வரும் ஜூலை 15ம் தேதிக்குள் இந்த வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.