வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானார். அந்த கொடூர நிகழ்வை அதில் ஈடுபட்ட நபர்கள் வீடியோவாகவும் படம் பிடித்தனர். இந்தநிலையில் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுடன் நடிகர் திலீப்புக்கும் முக்கிய பங்கு உண்டு என்பது விசாரணையில் தெரியவந்து அவரும் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மூன்று மாத சிறைத்தண்டனைக்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு சில வருடங்களாகவே மெதுவாக நகர்ந்து வந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையை மே 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே போலீசாருக்கு காலக்கெடு விதித்திருந்தது. ஆனால் திலீப் மொபைல்போனில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகள் சம்பந்தமாக இன்னும் சில சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டும் அதற்கு இன்னும் சற்று கால அவகாசம் வேண்டும் என போலீஸ் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம் 45 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி வரும் ஜூலை 15ம் தேதிக்குள் இந்த வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.




