முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிகழ்வு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் மலையாள நடிகர் திலீப் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு பின் ஜாமினில் விடுதலையானார்.
இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திலீப்பின் நண்பராக இருந்து பின்னர் அவருக்கு எதிராக திரும்பிய இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் திலீப் மீது விசாரணை அதிகாரிகளை கொல்ல முயற்சித்தார் என்று கூறி குற்றம் சாட்டி புகார் அளித்தார். அதனடிப்படையில் மீண்டும் திலீப் மீது இன்னொரு வழக்கும் பதியப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றார் திலீப்.
இயக்குனர் பாலச்சந்தர் குமார் போலீஸாரிடம் அளித்த புகாரில் திலீப் முதல் வழக்கில் ஜாமின் பெறுவதற்கும் அதன்பிறகு விசாரணை அதிகாரிகள் அவரை நெருங்காமல் இருப்பதற்கும் பின்னணியில் நெய்யாற்றின்கரையை சேர்ந்த வின்சென்ட் சாமுவேல் என்கிற பிஷப் ஆதரவாக செயல்பட்டார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக தற்போது போலீசாரிடம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த பிஷப் வின்சென்ட் சாமுவேல், பாலச்சந்திர குமார் கூறியவற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் இது உள்நோக்கத்துடன் கூறப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.