எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மலையாளத்தில் கடந்த வாரம் மம்முட்டி நடித்த புழு என்கிற படம் வெளியானது. நேற்று மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள டுவல்த் மேன் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனாலும் இந்த இரண்டு படங்களுமே தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியானது இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் சற்று வருத்தம் தான்.. என்றாலும் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் சிலருக்கு இது சந்தோசமான விஷயமாக அமைந்து விட்டது.
மோகன்லாலின் படம் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் கிட்டத்தட்ட 300 திரையரங்குகள் அவரது படத்திற்கு சென்றுவிடும். ஆனால் அவரது படம் நேரடியாக ஓடிடியிலேயே வெளியாகி விட்டதால், 5 சிறிய படங்கள் நேற்று தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளன.. அதேசமயம் இப்படி சிறிய படங்கள் தைரியமாக தியேட்டர்களில் வெளியாகும்போது எதற்காக மோகன்லால் ஜீத்து ஜோசப் என்கிற வெற்றிக்கூட்டணியில் உருவான டுவல்த் மேன் படத்தை ஓடிடியில் வெளியிட்டார்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.