சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் |
மலையாள திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் இருமுகம் கொண்டவர் விஜய்பாபு. சமீபத்தில் இவரது மூன்றாம் முகம் வெளிப்படும் விதமாக நடிகை ஒருவர் இவர் மீது காவல்நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்தார். இதனடிப்படையில் போலீசார் விஜய்பாபு மீது வழக்கு பதிந்துள்ளனர். தன்மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி புகார் கொடுத்துள்ளார் என சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளத்தை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தியதாக இன்னொரு வழக்கும் அவர் மீது பதியப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய்பாபு, தான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதற்காக துபாய்க்கு பறந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் போலீசார் விஜய்பாபுவுக்கு புளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்களது அடையாளத்தையும் இருப்பிடத்தையும் வெளிப்படுத்த கோரி அனுப்பப்படுவது தான் இந்த புளூ கார்னர் நோட்டீஸ். இருந்தாலும் தற்போது கோடைக்காலம் என்பதால் நீதிமன்ற விடுமுறை காரணமாக விஜய்பாபுவுக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவர் முன்ஜாமீன் பெற்ற பிறகே கேரளாவுக்கு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.