இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
மகேஷ்பாபு நடிப்பில் பரசுராம் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் வரும் மே மாதம் வெளியாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் தனது பணிகளை முடித்துக் கொடுத்துவிட்ட மகேஷ்பாபு தனது குடும்பத்துடன் ஜாலியாக துபாய்க்கு டூர் கிளம்பியுள்ளார். சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் துபாய் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின.
இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் இயக்குனர் ராஜமவுலியும் தனது குடும்பத்துடன் துபாய்க்கு டூர் கிளம்ப இருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. மகேஷ்பாபுவின் அடுத்த படத்தை இயக்குனர் ராஜமவுலி தான் இயக்குகிறார் என்பது ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளியான தகவல். இந்தநிலையில் இந்த புதிய படத்தின் கதை குறித்து துபாயில் மகேஷ்பாபுவுடன் விவாதிப்பதற்காக ராஜமவுலியும் துபாய் கிளம்பி செல்கிறார் என்று அவரது பயணத்திற்கான காரணமாக சொல்லப்படுகிறது.