வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மகேஷ்பாபு நடிப்பில் பரசுராம் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் வரும் மே மாதம் வெளியாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் தனது பணிகளை முடித்துக் கொடுத்துவிட்ட மகேஷ்பாபு தனது குடும்பத்துடன் ஜாலியாக துபாய்க்கு டூர் கிளம்பியுள்ளார். சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் துபாய் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின.
இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் இயக்குனர் ராஜமவுலியும் தனது குடும்பத்துடன் துபாய்க்கு டூர் கிளம்ப இருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. மகேஷ்பாபுவின் அடுத்த படத்தை இயக்குனர் ராஜமவுலி தான் இயக்குகிறார் என்பது ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளியான தகவல். இந்தநிலையில் இந்த புதிய படத்தின் கதை குறித்து துபாயில் மகேஷ்பாபுவுடன் விவாதிப்பதற்காக ராஜமவுலியும் துபாய் கிளம்பி செல்கிறார் என்று அவரது பயணத்திற்கான காரணமாக சொல்லப்படுகிறது.