ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மகேஷ்பாபு நடிப்பில் பரசுராம் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் வரும் மே மாதம் வெளியாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் தனது பணிகளை முடித்துக் கொடுத்துவிட்ட மகேஷ்பாபு தனது குடும்பத்துடன் ஜாலியாக துபாய்க்கு டூர் கிளம்பியுள்ளார். சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் துபாய் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின.
இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் இயக்குனர் ராஜமவுலியும் தனது குடும்பத்துடன் துபாய்க்கு டூர் கிளம்ப இருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. மகேஷ்பாபுவின் அடுத்த படத்தை இயக்குனர் ராஜமவுலி தான் இயக்குகிறார் என்பது ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளியான தகவல். இந்தநிலையில் இந்த புதிய படத்தின் கதை குறித்து துபாயில் மகேஷ்பாபுவுடன் விவாதிப்பதற்காக ராஜமவுலியும் துபாய் கிளம்பி செல்கிறார் என்று அவரது பயணத்திற்கான காரணமாக சொல்லப்படுகிறது.