புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மலையாள சினிமாவின் முக்கியமான ஆளுமையாக இருந்தவர் பிரேம் நசீர். 600 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர். பிரேம் நசீரின் சொந்த ஊர் திருவனந்தபுரம் அருகே உள்ள சிராயின்கீழ் புளிமூடு ஆகும். சினிமாவில் பெரிய இடத்துக்கு வந்த பிறகு இந்த ஊரில் பிரேம் நசீர் சொந்த வீடு கட்டி, அதற்கு லைலா காட்டேஜ் என்று பெயர் சூட்டி, அங்கு 30 ஆண்டுகள் வரை தன் குடும்பத்தினருடன் வாழ்ந்தார்.
பின்னர் இந்த வீட்டை அவரது மகள் ரீத்தாவுக்கு கொடுத்தார். தற்போது ரீத்தா தனது மகளுக்கு கொடுத்தார். ஆனால் தற்போது இவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இதனால் இந்த வீடு பராமரிப்பின்றி பாழடைந்து வருவதால் இதனை ரீத்தாவின் குடும்பத்தினர் விற்க முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீட்டை கேரள அரசே வாங்கி பிரேம் நசீரின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. 60 வருடங்களுக்கு பிறகும் இந்த வீடு சிறிதும் சேதமில்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரேம் நசீர், 520க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்ததற்காகவும், ஒரே ஹீரோயினுக்கு (ஷீலா) ஜோடியாக 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததற்காகவும் இரண்டு கின்னஸ் உலக சாதனை படைத்தவர்.