பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! |
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், விநாயகன் இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜும் நடித்திருந்த 'பட' என்கிற படம் வெளியானது. கே.எம்.கமல் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கேரளாவில் ஆதிவாசிகள் மற்றும் தலித் நடத்திய போராட்ட களத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் இந்த படம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்
இதுபற்றி அவர் கூறும்போது, 'இந்த படம் தற்போது வெளியாகி உள்ளது. இதை தியேட்டரில் தான் பார்க்கவேண்டும். உண்மை சம்பவங்களின் பின்னணியில் பவர்ஃபுல்லான அதேசமயம் பொழுதுபோக்கு அம்சத்துடன் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதை மலையாள சினிமாவின் திருப்பங்கள் கொண்ட ,'டாக் டே ஆப்டர்நூன்' படம் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று பாராட்டியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள இந்த டாக் டே ஆப்டர்நூன் படம் ஹாலிவுட் இயக்குனர் சிட்னி லூமெட் என்பவர் இயக்கி ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.