'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் |
மலையாள திரையுலகில் வித்தியாசமான அதேசமயம் துணிச்சலான வேடங்களில் நடித்து ரசிகர்களை பிரமிக்க வைக்கும் நடிகைகளில் முக்கியமானவர் ஸ்வேதா மேனன். அவரது ரதி நிர்வேதம் படமாகட்டும், அல்லது தனது நிஜ பிரசவத்தையே படமாக்க அனுமதித்த 'களிமண்ணு' படமாகட்டும், நடிப்புக்காக வழக்கமான எல்லைக்கோடுகளை தாண்ட தயங்காதவர் ஸ்வேதா மேனன். கடந்த இரண்டு வருடங்களாக பரபரப்பில் இருந்து ஒதுங்கியிருந்த ஸ்வேதா மேனன் தற்போது புத்தாண்டை முன்னிட்டு மவுனம் கலைத்துள்ளார்.
தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அவர் கூறும்போது, “கடந்த இரண்டு வருடங்கள் எல்லாவற்றையுமே மாற்றி விட்டன. நினைத்து பார்த்தால் மாநாடு படம் போலவே வாழ்க்கை மாறிவிட்டது. கொரோனா வந்தது.. லாக்டவுன் போட்டார்கள்.. ஓரளவு நிலைமை சரியானது.. ரிப்பீட்டு.. திரும்பவும் கொரோனா.. லாக்டவுன்.. மீண்டும் சரியானது.. இந்த புது வருடமாவது இந்த லூப்பில் இருந்து நம்மை காப்பாற்றும் என நம்புகிறேன்” என கூறியுள்ளார் ஸ்வேதா மேனன்