ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகை ஷாலு சவுரசியா. ஓ பில்லா நீ வல்லா, பாக்ய நகர வீட்டுல் கம்மத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஷாலு. மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் ஐதராபாத்தில் தனது வீட்டின் அருகில் உள்ள கேபிஆர் பூங்காவில் இரவு நேரத்தில் நடைபயிற்சி மற்றும் ஜாக்கிங் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் அவ்வாறு சென்றபோது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத சிலர் அவரிடம் இருந்த செல்போன், நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனர். அவரிடம் நகைகள் எதுவும் இல்லை. பணம் மற்றும் செல்போன் தர மறுத்துள்ளார். இதனால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு செல்போனையும், பணத்தையும் பறித்துச் சென்றனர். படுகாயம் அடைந்த ஷாலு தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பஞ்சாரா ஹில்ஸ் பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி செய்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.