‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மலையாள சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவர் நடித்த ஜோசப் படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் நடமாடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, கேரள காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. மாரத் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடந்தபோது, அந்த வழியாக காரில் சென்ற ஜோஜூ ஜார்ஜூக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜோஜூ ஜார்ஜின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஜோஜு ஜார்ஜ் கொடுத்த புகாரின் பேரில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் பி.ஒய்.ஷாஜகான் அளித்த புகார் அடிப்படையில், மாஸ்க் அணியாமல் பொது இடத்தில் மக்களிடம் பேசியதற்காக ஜோஜூ ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இரு வழக்குகளையும் தனித்தனியாக நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஜோஜு ஜார்ஜ் மீதான வழக்கில் அவர் ஒரு முறை கோர்ட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டு அபராதம் கட்டினால் போதும். ஆனால் காங்கிரஸ் நிர்வாகிகள் மீதான வழக்கு வலுவானது. இதில் அவர்களுக்கு சிறை தண்டனை கிடைக்கும் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.




