‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரபலங்கள் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்கிற பெயரில் சோசியல் மீடியாவில் அவ்வப்போது பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம். திரையுலக பிரபலங்களை பொறுத்தவரை தங்களது பிறந்த நாளிலோ அல்லது தங்களது படங்கள் ரிலீசாகும் சமயத்திலோ இதுபோன்று மரக்கன்றுகள் நட்டு தங்களது சக நடிகர் நடிகைகளுக்கு சவால் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் தற்போது நடிகர் துல்கர் சல்மான், தான் நடித்து பான் இந்தியா படமாக நாளை வெளியாக உள்ள குருப் என்கிற படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள அவர் தனது இன்னொரு படமான ஹே ஷினாமிகா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அதிதி ராவ் ஹைதரி விடுத்துள்ள மரம் நடும் சவாலை ஏற்று அங்கே மரக்கன்றுகளை நட்டு கிரீன் இந்தியா சேலஞ்ச் பிரச்சாரத்தை ரசிகர்களிடம் மீண்டும் துவக்கியுள்ளார்.
எண்பதுகளில் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய குருப் என்கிற கொலைகாரனை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. துல்கர் சல்மானை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.




