'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் |
படம் : பிரியாத வரம் வேண்டும்
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : பிரசாந்த், ஷாலினி, கோவை சரளா, மணிவண்ணன்
இயக்கம் : கமல்
தயாரிப்பு : நிகிலா எண்டர்பிரைசஸ்
நட்பு, காதலாக மலரும் தருணத்தை, அழகாக வெளிக்காட்டிய படம், பிரியாத வரம் வேண்டும். கடந்த, 1999ல், மலையாளத்தில் வெற்றி பெற்ற, நிறம் என்ற படத்தின், ரீமேக் இது. நிறம் படத்தை இயக்கிய கமலே, தமிழிலும் இயக்கினார். இரு படத்திலும் கதாநாயகியாக, ஷாலினி நடித்தார்.
இப்படம் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். படம் வெளியாவதற்குள், படக்குழுவிற்கு, நாக்கு தள்ளிவிட்டது எனக் கூறலாம். இரண்டாவது நாயகியாக நடிக்க, சினேகா தேர்வு செய்யப்பட்டார். பின், நிறம் படத்தில் நடித்த ஜோமோல், அக்கதாபாத்திரத்தில் நடித்தார். தயாரிப்பாளரின் பணப்பிரச்னை காரணமாக, இப்படம் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால், பிரசாந்த் வேறு படங்களில் நடிக்க சென்றார்.
ஷாலினியின், கால்ஷீட் வீணடிக்கப்பட்டது. ஒருவழியாக படப்பிடிப்பு திக்கி திணறி நடக்கையில், அஜித் - ஷாலினி திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் நடிப்பதில்லை என, முடிவெடுத்திருந்தார். அதனால், கிளைமேக்ஸ் எடுக்க முடியவில்லை. இதையடுத்து நிறம் படத்திலிருந்த காட்சிகளை எடுத்து வெட்டி, ஒட்டி படத்தை முடித்தனர்.
தேதி பிரச்னை காரணமாக, ராகவா லாரன்ஸ் நடனத்தில், வாஸ்கோடகாமா... என்ற பாடல், படம் பிடிக்கப்பட்டது. இதனால் பிரசாந்த் கோபமடைந்தார். பின், தன் சொந்த செலவில், அந்த பாடலின் படப்பிடிப்பை மேற்கொண்டார். இப்படி பல பிரச்னைகளை சந்தித்தாலும், குறிப்பிடத்தக்க வெற்றியை இப்படம் பெற்றது.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில், பிரிவொன்றை சந்தித்தேன், அழகு பொண்ணு, டிக்கி டிக்கி லோனா, விடை கொடு விடை கொடு உயிரே... பாடல்கள் ரசிக்க செய்தன.
குடும்பத்தோடு ரசிக்கத்தக்க, நல்ல காதல் கதை, பிரியாத வரம் வேண்டும்.