சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
தமிழில் கடந்த நான்கு வருடங்களாகத்தான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், ஹிந்தியில் 14 சீசன்கள் முடிந்துவிட்டது. இந்த வருடத்திற்கான 15வது சீசன் அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது.
கடந்த 11 சீசன்களாக சல்மான்கான் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வருகிறது. கடைசியாக ஒளிபரப்பான 14வது சீசனில் சல்மான்கான் ஒரு வாரத்திற்கு 20 கோடி வரை சம்பளம் வாங்கினாராம். ஆனால், வர உள்ள 15வது சீசனில் ஒரு வாரத்திற்கு 25 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.
நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருப்பதால் சல்மான்கான் கேட்ட தொகையை தயாரிப்பு நிறுவனம் வழங்க சம்மதித்துவிட்டதாம். மொத்தம் 14 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் மட்டும் சல்மான் மொத்தமாக 350 கோடி வரை சம்பாதித்து விடுவார்.
ஒரு படத்தில் 100 நாட்கள் நடித்தால் கிடைக்கும் சம்பளத்தை விட 14 நாட்களில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் மூன்று மடங்கு சம்பளம் அதிகம் வரும். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு அதிகமாக சம்பாதிக்கும் பிரபலங்களின் டாப் 5 பட்டியலில் சல்மான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.