விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
தமிழில் வெளியான எதிர்நீச்சல் படத்தில் அனிருத், ஹிப் ஆப் தமிழா ஆதி ஆகியோருடன் இணைந்து எதிர்நீச்சலடி... என்ற பாடலை பாடியவர் பிரபல பாலிவுட் பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் யோயோ ஹனி சிங். ஹிர்தேஷ் சிங் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். பஞ்சாபி மற்றும் பாலிவுட் படங்களில் பாடி இருக்கிறார்.
பஞ்சாபிலும், பாலிவுட்டிலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஹனி சிங்கின் மனைவி ஷாலினி தல்வார் கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஹனி சிங் மதுவுக்கு அடிமையாக விட்டதாகவும், தன்னை தேடி வரும் ரசிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். அதோடு தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், தன்னிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாபி முன்னணி நடிகை ஒருவர் உள்பட அவருக்குப் பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அதைத் தான் பலமுறை தட்டிக் கேட்டும் அவர் கேட்கவில்லை என்றும் ஷாலினி தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து வரும் 28ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு யோயோ ஹனி சிங்குக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.