‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
ஹிந்தியில் தயாராகி உள்ள படம் ஆதார். இதனை தேசிய விருது பெற்ற இயக்குனர் சுமன் கோஷ் இயக்கி உள்ளார். வட இந்திய கிராமம் ஒன்றில் ஆதார் கார்ட் வாங்கினால் குடும்பத்துக்கு ஆகாது என்ற ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. அதையும் மீறி அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர் ஆதார் கார்டு வாங்கி விடுகிறார்.
ஆதார் எண்ணை கூட்டி கழித்து பார்த்த கிராமத்து பூசாரி அவர் மனைவி இறந்து விடுவார் என்று குறி சொல்கிறார். இதனால் பயந்துபோன அந்த இளைஞர் தனது ஆதார் எண்ணை மாற்ற முயற்சிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
இந்த படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றழித்து விட்டபோதும் ஆதார் அட்டைகள் வழங்கும் உதய் அமைப்பு படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் படம் வெளிவரவில்லை. ஆதார் கார்டு பற்றிய தவறான தகவல்களை படம் கொண்டிருப்பதாக அது குற்றம் சாட்டுகிறது. 23 இடங்களில் காட்சிக்கு கத்திரி போட வேண்டும் என்று உதய் கேட்டு வருகிறது.
இதுகுறித்து இயக்குனர் சுமன் கோஷ் கூறியிருப்பதாவது: இந்த படம் ஆதார் அட்டைக்கு ஆதரவான படம். அப்படியான ஒரு படத்துக்கு தடை விதிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பொதுவான ஒரு குழு அமைத்து அவர்கள் படம் பார்த்து முடிவு செய்யட்டும். என்கிறார்.