மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
ஹிந்தியில் தயாராகி உள்ள படம் ஆதார். இதனை தேசிய விருது பெற்ற இயக்குனர் சுமன் கோஷ் இயக்கி உள்ளார். வட இந்திய கிராமம் ஒன்றில் ஆதார் கார்ட் வாங்கினால் குடும்பத்துக்கு ஆகாது என்ற ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. அதையும் மீறி அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர் ஆதார் கார்டு வாங்கி விடுகிறார்.
ஆதார் எண்ணை கூட்டி கழித்து பார்த்த கிராமத்து பூசாரி அவர் மனைவி இறந்து விடுவார் என்று குறி சொல்கிறார். இதனால் பயந்துபோன அந்த இளைஞர் தனது ஆதார் எண்ணை மாற்ற முயற்சிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
இந்த படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றழித்து விட்டபோதும் ஆதார் அட்டைகள் வழங்கும் உதய் அமைப்பு படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் படம் வெளிவரவில்லை. ஆதார் கார்டு பற்றிய தவறான தகவல்களை படம் கொண்டிருப்பதாக அது குற்றம் சாட்டுகிறது. 23 இடங்களில் காட்சிக்கு கத்திரி போட வேண்டும் என்று உதய் கேட்டு வருகிறது.
இதுகுறித்து இயக்குனர் சுமன் கோஷ் கூறியிருப்பதாவது: இந்த படம் ஆதார் அட்டைக்கு ஆதரவான படம். அப்படியான ஒரு படத்துக்கு தடை விதிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பொதுவான ஒரு குழு அமைத்து அவர்கள் படம் பார்த்து முடிவு செய்யட்டும். என்கிறார்.