தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். கணவர் கைது செய்யப்பட்டது குறித்து எந்தவித கருத்தும் சொல்லாமல் பல நாட்களாக அமைதி காத்து வந்த ஷில்பா ஷெட்டி தற்போது மவுனம் கலைத்திருக்கிறார்.
அதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் தர்பர் எழுதிய ஒரு புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வரிகளை மேற்கோள் காட்டி அந்த பதிவினை போட்டுள்ளார். அதாவது, நடந்து முடிந்ததை நினைத்து கோபம் கொள்ளாதே, நடக்கப்போவதை நினைத்து பயம் கொள்ளாதே. ஆனால் நடந்து வருவதில் விழிப்புடன் இரு என்று எழுதியிருக்கிறார்.
மேலும், நம்மை காயப்படுத்தியவர்களை நினைத்து கோபப்படுவோம். எதிர்காலத்தில் நடக்கப்போவதை நினைத்து தேவையில்லாத பயத்தை மனதில் போட்டு குழப்பிக் கொள்வோம். ஆனால் அது தேவையில்லை. அவர் எழுதியதைப்போன்று நடந்ததை நினைத்து கோபத்தை காட்டுவதோ அல்லது வருத்தப்படுவதோ தேவையில்லை. நடப்பதில் தெளிவாக இருப்போம். என்னுடைய கடந்த காலங்களில் பல சோதனைகளை கடந்து வந்துள்ளேன். அதேபோல் இதையும் கடந்து வருவேன். நான் எனது வாழ்க்கையை வாழ்வதற்கு எதுவுமே தடையாக இருக்காது என்று பதிவிட்டுள்ளார் ஷில்பா ஷெட்டி.
![]() |