பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் புகழ்பெற்ற டி-சீரிஸ் ஆடியோ நிறுவனத்தின் உரிமையாளருமான பூஷண் குமார் மீது மும்பை டிஎன் நகர் காவல்நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுக்கப்பட்டு, எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. 30 வயதான பெண் ஒருவர் பூஷண்குமார் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூஷண்குமார் தரப்பினரோ இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அவர்கள் தரப்பில் இருந்து வெளியிட்டுள்ள செய்தியின்படி, ‛‛சம்பந்தப்பட்ட பெண், தான் வெப்சீரிஸ் தயாரிக்கப்போவதாக பூஷண்குமாரை அணுகி அதற்காக பணம் கேட்டாராம். ஆனால் அதற்கு பூஷண்குமார் மறுத்துவிட்டதால், தன்னிடம் தவறாக நடந்ததாக வெளியில் கூறிவிடுவேன் என பணம் கேட்டு மிரட்டினாராம் அந்த பெண். அதற்கு பூஷண்குமார் மசியாததால், அவர்மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி புகார் அளித்துள்ளாராம். இதை சட்ட ரீதியாக சந்திப்போம்'' என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.