வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் புகழ்பெற்ற டி-சீரிஸ் ஆடியோ நிறுவனத்தின் உரிமையாளருமான பூஷண் குமார் மீது மும்பை டிஎன் நகர் காவல்நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுக்கப்பட்டு, எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. 30 வயதான பெண் ஒருவர் பூஷண்குமார் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூஷண்குமார் தரப்பினரோ இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அவர்கள் தரப்பில் இருந்து வெளியிட்டுள்ள செய்தியின்படி, ‛‛சம்பந்தப்பட்ட பெண், தான் வெப்சீரிஸ் தயாரிக்கப்போவதாக பூஷண்குமாரை அணுகி அதற்காக பணம் கேட்டாராம். ஆனால் அதற்கு பூஷண்குமார் மறுத்துவிட்டதால், தன்னிடம் தவறாக நடந்ததாக வெளியில் கூறிவிடுவேன் என பணம் கேட்டு மிரட்டினாராம் அந்த பெண். அதற்கு பூஷண்குமார் மசியாததால், அவர்மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி புகார் அளித்துள்ளாராம். இதை சட்ட ரீதியாக சந்திப்போம்'' என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.