அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
இந்தியாவின் செஸ் வீரர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவின் முக்கிய விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமாவாகி வருவதை போன்று விரைவில் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கையும் சினிமாவாக இருக்கிறது. இது தொடர்பான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட செக்மேட் கோவிட் என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபலங்கள் சிலர் விஸ்வநாதன் ஆனந்துடன ஆன்லைன் மூலமாக செஸ் விளையாடினார்கள். அதன் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகர் ஆமீர்கானும் அவருடன் செஸ் விளையாடினார். அப்போது விஸ்வநாதன் ஆனந்தின் பயோபிக்கில் நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டபோது ஆமீர்கான் கூறியதாவது:
விஸ்வநாதன் ஆனந்தன் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு கவுரவம், மகிழ்ச்சி. அப்படி நான் நடித்தால் அவரது எண்ணங்களை என மனதில் ஏற்றிக் கொள்வேன். அது இன்னும் உற்சாகத்தை தரும். அவரோடு நிறைய நேரம் செலவிட்டு அவரது மன ஓட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வேன். அவரது குடும்பத்தினரிடமும் பேசி அவரைப் பற்றித் தெரிந்துகொள்வேன். அதன் பிறகு திரையில் அவரைப் போல நடித்து ஆச்சரியப்படுத்துவேன் . எனவே அப்படி ஒரு விஷயம் நடந்தால் அதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன். என்று ஆமிர் கான் பதிலளித்தார்.