பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் | நானும், அனிருத்தும் மோனிகாவின் தீவிர ரசிகர்கள் : லோகேஷ் கனகராஜ் | 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! | சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள் | 'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல் | சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு |
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரபுவதற்கு முன்பாகவே மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவியது. அங்கு கடந்த மாதத்திலிருந்து தொற்று பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. கடந்த வாரத்திற்கான தளர்வுகளில் சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. கடும் பாதுகாப்பு, கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்தலாம் என அனுமதிக்கப்பட்டது. வெளிப்புற படப்பிடிப்புகளை மாலை 5 மணிக்கு மேல் நடத்த அனுமதியில்லை.
அதன் காரணமாக தற்போது பாலிவுட்டில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பரபரப்பாக ஆரம்பமாகி நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். சில பெரிய படங்களின் படப்பிடிப்புகளுக்கு அதில் நடிக்கும் பெரிய நடிகர்களின் கால்ஷீட் காரணமாக இந்த வாரத்தில்தான் ஆரம்பமாகும் என்கிறார்கள். பல சினிமா பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பயமில்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முன் வருகிறார்களாம்.
தெலுங்கிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில்தான் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகள் அதிகம் நடக்கும். தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பும் அங்கு அதிகம் நடைபெறும் என்பதால் இங்கிருந்தும் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தெலுங்கு, தமிழில் சினிமா படப்பிடிப்புகள் இன்னும் பரபரப்பாக ஆரம்பமாகாமல் இருக்கிறது. அடுத்த வாரத்தில் அவை தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.