2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

ஒருகாலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக, எதிரணி பவுலர்களை கதிகலங்க வைத்தவர் கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த்துக்கு அதன்பின்னர் பின்னடைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சினிமா பக்கம் தனது கவனத்தைத் திருப்பியவர், டீம் 5 என்கிற மலையாள படத்தில் ஹீரோவாக நடித்தார் மேலும் ஒன்றிரண்டு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர், தற்போது இந்தியில் 'பட்டா' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தில் இவருக்கு சிபிஐ அதிகாரி வேடம். ராதாகிருஷ்ணன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார் இந்த படத்தில் ஸ்ரீசாந்த் நடிப்பது குறித்து இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “நான் உருவாக்கிய சிபிஐ ஆபீசர் கதாபாத்திரத்திற்கு, ஸ்ரீசாந்த் மிகப்பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. அவரிடம் இந்த கதை பற்றி கூறியபோது ஒரு காட்சியை என்னிடம் நடித்துக் காட்டினார். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. இந்த படத்தில் அவருடன் இருப்பவர்களே, அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று யூகிக்க முடியாத புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிரடியான சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார் ஸ்ரீசாந்த்” என்று கூறியுள்ளார்