அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தமிழில் கார்த்தியுடன் நடித்த சுல்தான் படத்திற்கு பிறகு வேறு படங்களில் ஒப்பந்தமாகாத ராஷ்மிகாமந்தனா, தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பாவில் நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் குட்பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களுமே 2022ஆம் ஆண்டில் திரைக்கு வருகின்றன. இந்த நிலையில் அடுத்தபடியாக பிரபல ஹிந்தி பட தயாரிப்பாளர் சாஜித் நதியாட்வாலா என்பவரும் தனது புதிய படத்திற்கு ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அந்த வகையில், இன்னமும் ஹிந்தியில் அவர் நடித்து ஒரு படம் கூட திரைக்கு வராத நிலையில் மூன்றாவது படத்தில் ஒப்பந்தமாகப்போகிறார். இதனால் 2022ஆம் ஆண்டில் பாலிவுட்டில் ராஷ்மிகா மந்தனா முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்து விடுவார் என்கிற பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.