சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தமிழில் கார்த்தியுடன் நடித்த சுல்தான் படத்திற்கு பிறகு வேறு படங்களில் ஒப்பந்தமாகாத ராஷ்மிகாமந்தனா, தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பாவில் நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் குட்பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களுமே 2022ஆம் ஆண்டில் திரைக்கு வருகின்றன. இந்த நிலையில் அடுத்தபடியாக பிரபல ஹிந்தி பட தயாரிப்பாளர் சாஜித் நதியாட்வாலா என்பவரும் தனது புதிய படத்திற்கு ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அந்த வகையில், இன்னமும் ஹிந்தியில் அவர் நடித்து ஒரு படம் கூட திரைக்கு வராத நிலையில் மூன்றாவது படத்தில் ஒப்பந்தமாகப்போகிறார். இதனால் 2022ஆம் ஆண்டில் பாலிவுட்டில் ராஷ்மிகா மந்தனா முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்து விடுவார் என்கிற பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.