அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
என்ன தான் எதிர்ப்புகள், விமர்சனங்கள் இருந்தாலும் இந்தியாவில் இதுவரை வெளியான வெப் சீரிஸ்களில் பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்து வருகிறது தி பேமிலி மேன் 2. அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, ப்ரியாமணி, ஷரத் கேல்கர், மைம்கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இயக்கியிருந்தனர்.
இலங்கை தமிழர்களையும், அங்கு நடந்த போராட்டத்தை இந்த தொடர் தவறாக சித்தரிப்பதாக கூறப்பட்டது. இதற்கு இயக்குனர்களும், நடிகை சமந்தாவும் விளக்கம் அளித்து விட்டார்கள். இந்த நிலையில் ஸ்ரீகாந்த் திவாரி கேரக்டரில் நடித்த மனோஜ் பாஜ்பாய் கூறியிருப்பதாவது:
நாங்கள் ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஒவ்வொரு மனிதருடைய நம்பிக்கையையும், கலாச்சாரத்தையும் மதிக்கிறோம். யாரையும் காயப்படுத்துவதற்காக நாங்கள் எதையும் செய்யவில்லை. முதல் சீசனிலும் சரி, இந்த சீசனிலும் சரி நாங்கள் அரசியல் குறித்துப் பேசவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதற்கே உரிய மனிதத்தன்மையுடன் அணுகி உள்ளோம்.
ஒவ்வொரு கேரக்டரும் அவர்களுடைய சொந்தக் கதையில் ஹீரோதான். இப்போது இத்தொடர் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில் நீங்கள் பயந்த அளவுக்கு அது இல்லை என்பதை நீங்கள் எங்கோ ஓரிடத்தில் உணர்கிறீர்கள். அது உங்களைப் பற்றியும் உங்கள் நம்பிக்கைகளைப் பற்றியும் மிகவும் மரியாதையான வகையில் அன்புடன் பேசுகிறது.
இவ்வாறு மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார்.