படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
கொரோனா அலை முதல் முதலாக கடந்த வருடம் பரவிய போது தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. முடங்கிக் கிடந்த புதிய படங்களை வெளியிட மாற்று வழியாக ஓடிடி தளங்கள் மூலம் வெளியீடு நடந்தது.
தமிழ் உள்ளிட்ட முக்கிய மொழிகளில் பல புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகின. ஆனால், அவற்றில் பெரும்பாலான படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்தன. தியேட்டர்களில் பார்க்கும் திருப்தி ஓடிடி மூலம் பார்ப்பதில் கிடைக்கவில்லை என்பதே பலரது கருத்தாக இருந்தது.
இந்த இரண்டாவது அலை பரவலின் போது பாலிவுட்டில் முதல் பெரிய ஓடிடி வெளியீடாக பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்த 'ராதே' படம் வெளியானது. ஆனால், படத்திற்கு மோசமான விமர்சனங்களும், வரவேற்பும்தான் கிடைத்தது. 249 ரூபாய் பணம் செலுத்தி பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள்.
இதனிடையே, பைரசி மூலம் பல ரசிகர்கள் படங்களைப் பார்த்தது குறித்தும் சல்மான் கோபமடைந்தார். படத்தைக் கிண்டலடித்து விமர்சனம் செய்த கமால் கான் என்பவர் மீது சல்மான் கான் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சல்மானின் வழக்கு முடிவுக்கு ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்தனர்.
இப்படி தேவையில்லாத சர்ச்சைகள் வந்ததையடுத்து சல்மான் கான் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். இனி, எக்காரணத்தைக் கொண்டும் தன்னுடைய படங்களை ஓடிடியில் வெளியிடுவதில்லை, தியேட்டர்களில் மட்டுமே வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டாராம். இதனால், தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.