துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
அக்ஷய்குமார், வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா நடித்துள்ள படம் பெல்பாட்டம். 1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம் இது. ரஞ்சித் எம் திவாரி இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் கொரோனா காலத்துக்கு இடையில் ஒரே கட்டமாக லண்டனில் நடந்து முடிந்தது. படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளும் முடிந்த நிலையில் படம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது.
இந்த ஆண்டு இறுதிவரை தியேட்டர்கள் திறக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் உரிமையை கடும் போட்டிக்கு இடையே, அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும்.
இதற்கிடையில் தனது பட வெளியீடு தொடர்பாக அக்ஷய்குமார் விடுத்துள்ள அறிக்கையில், "பெல் பாட்டம் பட வெளியீடு குறித்து எனது ரசிகர்களின் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். அத்துடன் அவர்களின் அன்பிற்கு எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வெளியீட்டுத் தேதி குறித்து தயாரிப்பாளர்கள் ஆலோசித்து வருகிறார்கள். சரியான நேரத்தில் அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.