மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து டில்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜன.,26ல் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறையில் முடிந்தது. இதனை தொடர்ந்து இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதில் பாலிவுட் நட்சத்திரங்களான கங்கனா ரணவத், அக்சய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
அதேசமயம் கான் நடிகர்களான அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர் இந்த விஷயத்தில் கருத்து கூறாமல் மவுனம் சாதித்து வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் சல்மான் கான் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவரிடம் விவசாயிகள் போராட்டம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு எந்த தரப்பினருக்கும் சாதகமாகவோ, எதிர்ப்பாகவோ பதில் சொல்லாமல், “நல்ல, மிகச் சரியான, உன்னதமான விஷயம் நிச்சயம் நடந்தே தீர வேண்டும்” என நழுவலாக பதில் கூறியுள்ளார்.