இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து டில்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜன.,26ல் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறையில் முடிந்தது. இதனை தொடர்ந்து இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதில் பாலிவுட் நட்சத்திரங்களான கங்கனா ரணவத், அக்சய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
அதேசமயம் கான் நடிகர்களான அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர் இந்த விஷயத்தில் கருத்து கூறாமல் மவுனம் சாதித்து வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் சல்மான் கான் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவரிடம் விவசாயிகள் போராட்டம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு எந்த தரப்பினருக்கும் சாதகமாகவோ, எதிர்ப்பாகவோ பதில் சொல்லாமல், “நல்ல, மிகச் சரியான, உன்னதமான விஷயம் நிச்சயம் நடந்தே தீர வேண்டும்” என நழுவலாக பதில் கூறியுள்ளார்.