ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தனது டுவிட்டரில் நாட்டு நடப்புகள் பற்றிய தனது கருத்தை துணிச்சலுடன் வெளியிடுவார். இதற்காக அவர் பல மிரட்டல்கள், வீடு இடிக்கப்பட்டது போன்ற பாதிப்புகளை சந்தித்தபோதும் தனது கருத்தை துணிச்சலாக கூறி வருகிறார்.
டில்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
ரிஹானா டுவீட்டுக்கு பதில் தெரிவித்து கங்கனா ரணாவத் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “ அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை, ஏனெனில், அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். அமெரிக்காவை போல பிளவுபட்ட தேசத்தை சீனா தனது காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கும். பொறுமையாக இருங்கள் முட்டாளே, உங்களை போல நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கங்கனா வெளியிட்டிருந்த பதிவுகளை, டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. கங்கனா டுவிட்டர் நிறுவன விதிகளை மீறியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கங்கனாவின் பதிவுகள் நீக்கப்படுவதும், அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்படுவதும் அடிக்கடி நடந்து வருகிற ஒன்று.