கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
சமூக வலைத்தளங்களில் நடிகர்கள், நடிகைகள், சினிமா பிரபலங்கள் பலரும் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாகப் பதிவிடாமல் அதற்கான வேலைகளைச் செய்வதற்க 'அட்மின்' என சிலரை வைத்து வேலை வாங்குவார்கள். அந்தக் காலத்தில் ரசிகர்கள் எழுதும் கடிதங்களைப் படித்துப் பார்க்காமல், நடிகர்களின் உதவியாளர்களே அவற்றிற்கு பதில் கடிதம் எழுதி அனுப்புவார்கள். அது போலத்தான் இந்தக் காலத்தில் இந்த சமூக வலைத்தள 'அட்மின்'களும் வேலை செய்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துவிட்ட சிவகார்த்திகேயன் தற்போது அவருடைய டுவிட்டர் கணக்கிற்கு அட்மின்--ஐ நியமித்துள்ளார். அவரது கணக்கின் சுயவிவரத்தில் தற்போது ,“எஸ்கே குழுவினர் நிர்வகிக்கும் அதிகாரப்பூர்வ கணக்கு,” என மாற்றப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு ஜுலை 2ல் நடைபெற உள்ள நிலையில் இந்த திடீர் மாற்றம் ஏன் என்று தெரியவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி, “எனது அன்பான சகோதர சகோதரிகளே, டுவிட்டரிலிருந்து சில காலம் விலகி உள்ளேன், சீக்கிரமே திரும்பி வருவேன், கவனமாக இருங்கள். படங்கள் பற்றிய அப்டேட்களை எனது குழுவினர் இங்கு பகிர்வார்கள்,” எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடித்து வருவதால் இந்த தற்காலிக விலகல் என்றார்கள். 'மாவீரன்' படம் இன்னும் 20 நாட்களில் வெளியாக உள்ள நிலையில் அப்போது கூட சிவகார்த்திகேயன் டுவிட்டர் பக்கம் வருவாரா அல்லது விலகியே இருப்பாரா ?.