ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கொரோனா தாக்கம் துவங்கியதில் இருந்து பாதிக்கப்பட்ட பலவேறு மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து கோடிகளை செலவு செய்து உதவி வருகிறார் வில்லன் நடிகர் சோனு சூட். தொடர்ந்து உதவிகள் செய்தே பழகிவிட்டதாலோ என்னவோ, அதை வழக்கமாகவே மாற்றிக்கொண்டு விட்ட சோனு சூட், தற்போது, தான் நடித்துவரும் ஆச்சார்யா படக்குழுவினர் 100 பேருக்கு ஸ்மார்ட்போன் வழங்கி அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கொரோனா தாக்கம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவரும் வீட்டுக்கு செல்லாமலேயே கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வருகின்றனர். இதனை தெரிந்துகொண்ட சோனு சூட், அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாகவும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை பரிசாக கொடுத்து நெகிழ வைத்துள்ளார்.