ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அமீர் கான். இவர் ஒவ்வொரு கதையும் பொறுமையாக தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் அதிக வசூலை கொடுத்த நடிகர்களில் இவர் தான் முதலிடத்தில் உள்ளார். இவரது டங்கல் படம் ரூ.2000 கோடி வசூலை கடந்து அசத்தியது.
அதன்பின் இவர் நடித்த படங்கள் வசூலை குவிக்கவில்லை. இவர் பெரிதும் எதிர்பார்த்த லால் சிங் சத்தா படமும் ஏமாற்றத்தையே தந்தது. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "கடந்த 20 ஆண்டுகளாக நான் நடித்து வரும் படங்களுக்கு சம்பளமாக பெறுவதில்லை. அப்படம் திரைக்கு வந்து வெற்றி பெற்று லாபம் தந்த பிறகே லாபத்தில் இருந்து பங்கு பெற்றுக் கொள்வேன். அதற்கு முன்பு ஒரு ரூபாய் கூட முன்பணமாக பெறுவதில்லை" என தெரிவித்துள்ளார்.