நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

பாலிவுட் நடிகர் சைப் அலிகான் மும்பையில் அவரது வீட்டில் இருந்தபோது கடந்த 16ம் தேதி நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அவரை கத்தியால் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து சைப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு நேற்று பிற்பகல் சைப் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சைப் அலிகானுக்கு கத்தி குத்து ஏற்பட்ட சமயம் அவரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சரியான நேரத்தில் உயிரை காப்பாற்றியவர் ஆட்டோ டிரைவர் பஜன்சிங் ராணா. அந்த சமயத்தில் அவர் பணம் கூட வாங்கவில்லை. இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் முன் பஜன்சிங் ராணாவை மருத்துவமனையிலேயே சந்தித்துள்ளார் சைப். அதோடு அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கி சைப் கவுரவித்தார்.




