சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அதிரடியான நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். தனக்கு மனதில் பட்டதை துணிச்சலாக சொல்லும் தைரியம் கொண்ட கங்கனா திரைப்படங்களிலும் அதுபோன்ற கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'எமர்ஜென்சி' படத்தில் மறைந்த பிரதமர் இந்திராவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கங்கனா. இந்த படத்தை அவரே இயக்கியுள்ளதுடன் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த படம் தயாரிப்பில் இருந்த நிலையில் பொருளாதார பிரச்னை, படத்தை திரையிட கூடாது என எழுந்த எதிர்ப்பு, சென்சார் கெடுபிடி என அனைத்தையும் தாண்டி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதுடன் வசூலும் மிதமான வேகத்தில் தான் முன்னேறி வருகிறது.
இந்த நிலையில் இந்த படம் பற்றி கங்கனா சமீபத்தில் கூறும்போது, "ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்கள் இந்த படத்திற்காக பணம் போடுவதை நிறுத்திக் கொண்டனர். உதவுவதாக சொன்ன ஓடிடி நிறுவனங்கள் கூட ஆதரவளிக்காமல் ஒதுங்கிக் கொண்டன. வேறு வழியின்றி எனது வீட்டை அடமானம் வைத்து இந்த படத்தின் வேலைகளை முடித்தேன்" என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக 'மணிகர்ணிகா' என்கிற வரலாற்று படத்தை இயக்கிய கங்கனா, இரண்டாவது முறையாக இயக்கியுள்ள படம் தான் இந்த எமர்ஜென்சி என்பது குறிப்பிடத்தக்கது.